பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கையெறிகுண்டு பஞ்சாப் எல்லைப் பகுதியில் கண்டுபிடிப்பு

0 2898

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கையெறிகுண்டு பஞ்சாப் எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அட்டாரி - பச்சிவிந்த் சாலையில் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட ஆர்டிஎக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் ஆன கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு லட்சம் ரூபாய் இந்தியப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பஞ்சாபில் பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெடிபொருள் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டெல்லி காசிப்பூர் பூச்சந்தையில் இதேபோல் கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments