ரயிலில் கடத்த முயன்ற 61 ஆமைகளை உயிருடன் மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர்

0 3664

பீகாரில் ரயிலில் கடத்த முயன்ற 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஆள் அரவமற்று கிடந்த 3 பைகளில் 61 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீரர்களை கண்டதும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பித்து இருக்கலாம் என தெரிவித்த ரயில்வே பாதுகாப்பு படையினர், மீட்கப்பட்ட ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments