கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்.!
சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், தொற்று பாதித்த நபர்களின் இல்லங்களுக்கு நாள்தோறும் சென்று அவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க, ஒரு வார்டிற்கு ஒரு குழு வீதம், 1000 களப்பணியாளர்கள் கொண்ட 200 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகள் மாநகராட்சி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
Comments