தமிழகத்தில் வருகிற 17 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு..!

0 8118

தமிழகத்தில் வருகிற 17 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18 ஆம் தேதி தைப்பூச திருநாளின் போது அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17 ஆம் தேதி விடுமுறை அளிக்கும்படி பணியாளர்கள் சங்கங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை பரிசீலித்து பணியாளர்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 17 ஆம் தேதி விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments