அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு ; உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

0 8950
அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும்  கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் 20-ந் தேதிக்கு பின்னர் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்றும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறினார்.

மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி ஒரு வாரத்திற்கு முன்பாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தும் கல்லூரிகள் மூடப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments