ஜன்தன் யோஜனா வங்கி கணக்கில் இதுவரை ரூ.1.50லட்சம் கோடி டெபாசிட்.!

0 4351

அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்கும் வகையில், மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை 44 கோடியே 23 லட்சம்பேர் ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் மூலம் ஒரு லட்சத்து 50ஆயிரத்து 939 கோடியே 36 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதவித்தொகை, மானியம், ஓய்வூதியம், கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட பயன்பாடுகள் நேரடி ரொக்கப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், ஜன் தன் யோஜனா உள்ளிட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments