மூன்று கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கிக்கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழு நியமனம்

0 1883
மூன்று கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கிக்கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழு நியமனம்

மூன்று கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கிக்கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

முன்பு 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கிக்கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை மூன்று கோடி ரூபாய்க்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையமான சிவிசி இதற்கான சட்ட விதிகளைத் திருத்தியுள்ளது.

இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை எடுத்து இக்குழு கடன் வாங்கியவர் மீது நடவடிக்கையை முடிவு செய்யும்.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ற பொதுத்துறை வங்கிகளின் கோரிக்கையும் இந்த நிபுணர்க்குழுவால் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments