தடுப்பூசிச் சான்றிதழின் கடைசி நான்கு இலக்கங்கள் சீசன் டிக்கெட்டில் அச்சிடப்படும் ; தெற்கு ரயில்வே

0 4375
சீசன் டிக்கெட் வாங்கத் தடுப்பூசிச் சான்றிதழைக் கொடுக்க வேண்டும்

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் செல்லலாம் என்கிற கட்டுப்பாடு நாளை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், தடுப்பூசிச் சான்றிதழின் கடைசி நான்கு இலக்கங்கள் சீசன் டிக்கெட்டில் அச்சிடப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய சீசன் டிக்கெட் வாங்குவோர் இரண்டாம் தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை கவுன்டரில் கொடுத்தால், அதில் உள்ள 12 இலக்க எண் கணினியில் பதியப்பட்டு ஒவ்வொரு முறையும் சீசன் டிக்கெட் எடுக்கும்போதும் கடைசி 4 இலக்கங்கள் அச்சிடப்படும்.

ஏற்கெனவே சீசன் டிக்கெட் எடுத்திருப்போர் தடுப்பூசிச் சான்றிதழைக் கையில் வைத்திருப்பதுடன் ரயில்வே அலுவலர்கள் கேட்கும்போது காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments