பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட பெற்றுத் தர முடியும்… தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. பேச்சு

0 2962

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகைகள் உள்ளன என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எட்டயபுரம் மகாகவி பாரதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றார்.

மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments