தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 11338
தமிழகத்தில் அடுத்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

10 ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும், 11 ஆம் தேதி தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 12 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த இருநாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்றும், 9 ஆம் தேதி அன்று இலங்கைக்கு தென் கிழக்கே, தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments