சிபிஎஸ்இ-ன் பிளஸ் 2 மாணவர்களின் கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு விதி நீக்கம்.!

0 2486

பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான், அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிகுமார் ஆகியோர், இரு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனரோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இரண்டாவது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்ச்சி என்ற விதிமுறையை சி.பி.எஸ்.இ. நீக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments