முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் ; தெற்கு ரயில்வே

0 13637

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஞாயிறன்று பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு வரையும், மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ள தெற்கு ரயில்வே, ஞாயிற்றுகிழமை அன்று ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுன்ட்டர்கள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments