எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அக்கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று கொரோனா உறுதியானவர்களின் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பிற்கான அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Comments