செங்கல்பட்டில் 2 ரவுடிகள் என்கவுன்டர்.!

0 11107

செங்கல்பட்டில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டு வீசி நிகழ்த்தப்பட்ட இரட்டை படுகொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள், போலீசாரால் அதிரடி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள ரவுடிகளுக்கும், தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவுக்கும் தொடர்பிருக்கிறதா.? என ஏஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

செங்கல்பட்டு காவல்நிலையம் அருகேயுள்ள டீக்கடையில், அப்பு கார்த்திக் என்பவர் நேற்று டீக்குடிக்க வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டியும் தலையை சிதைத்து கொலை செய்துவிட்டு தப்பியது. அடுத்த சில நிமிடங்களில் அங்குள்ள வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்த மகேஷ்குமார் என்பவரையும், அதே கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த இரட்டை கொலைகளில் தொடர்புடைய மாதவன் என்பவரும், ஜெசிகா என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 குற்றவாளிகள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கியிருந்த 2 குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது வெடிகுண்டு வீசி தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் தப்ப முயன்றனர். இதையடுத்து, தீனா என்கிற தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய 2 ரவுடிகளும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவை, கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை தேடி வரும் நிலையில், செங்கல்பட்டில், 2 ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கின்றனர். என்கவுன்டர் செய்யப்பட்டுள்ள ரவுடிகளுக்கும், தலைமறைவாக உள்ள ரவுடி படப்பை குணாவுக்கும் தொடர்பிருக்கிறதா.? என ஏஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments