பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல்பெண் நீதிபதி நியமனம்

0 3158

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திற்கு முதன்முறையாக ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீதிபதி ஆயிஷா மாலிக் முன்னணி கார்ப்பரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.

பின்னர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகியிருக்கிறார்.கரும்பு விவசாயிகளுக்கு கூலி வழங்குதல், தேர்தலில் சொத்து அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments