தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல்

0 3093
தமிழக மீனவர்கள் மீது கற்களை கொண்டு தாக்கிய இலங்கை கடற்படையினர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கற்களை கொண்டு தாக்கினர்.

இதில் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் சில சேதமடைந்தன. இதனையடுத்து மீன் பிடிப்பதை நிறுத்திய மீனவர்கள், உடனே கரைக்கு திரும்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments