காவல் ஆய்வாளர் எனக் கூறி நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது

0 2376
காவல் ஆய்வாளர் எனக் கூறி நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது

சென்னை திருவான்மியூரில் கடைக்குள் புகுந்த கொள்ளையன், காவல் ஆய்வாளர் என கூறி 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 வாட்ச்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடிகாரங்களை வாங்கி விட்டு தன் வீடு பக்கத்தில் தான் இருப்பதாகவும், கடை ஊழியரை தன்னுடன் அனுப்பிவைத்தால் கையோடு பணத்தை கொடுத்து அனுப்பி விடுவேன் எனவும் கூறியிருக்கிறான்.

பின்னர் அவருடன் அனுப்பிவைக்கப்பட்ட ஊழியரை நடு வழியிலேயே இறக்கிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்ற அவனை, சிசிடிவி காட்சி அடிப்படையில் திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையன் மீது ஏற்கனவே பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments