நள்ளிரவில் மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் கொள்ளை

0 2220
நள்ளிரவில் மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்புக்குள் நள்ளிரவில் புகுந்த கொள்ளையன், மருத்துவரின் வீட்டில் இருந்து பணத்தை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோரிமேடு பகுதியில் உள்ள அந்த குடியிருப்பில் வசித்து வரும் மருத்துவர் பிபிக் ஆனந்த் வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், சுற்று முற்றிலும் தேடிவிட்டு மருத்துவரின் பர்சில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் திருடிச் சென்றுள்ளான்.

மறுநாள், பணம் காணாமல் போனதைக் கண்ட மருத்துவர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மூன்று மர்ம நபர்கள் குடியிருப்புக்குள் புகுந்ததும் அதில் ஒருவன் வீட்டுக்குள் புகுந்து நோட்டமிட்ட காட்சிகளும் பதிவாகியிருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments