சென்னை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு.?

0 2477

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  அவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் வேகமெடுக்கும் நிலையில், குரோம்பேட்டை எம்ஐடி கல்வி நிறுவனத்தில் விடுதியில் தங்கியுள்ள 1464 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவில், நேற்று 67 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனத்தை ஒருவாரத்திற்கு மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ள நிலையில், தொற்று உறுதியான மாணவர்கள் வளாகத்திலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments