ஜார்க்கண்டில் பேருந்து, சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! 17 பயணிகள் உயிரிழப்பு.!

0 2340

ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பயணிகள் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜஸ்தீ எனுமிடத்துக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பேருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றி எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேராக மோதியது.

இதில் பேருந்து சுக்கு நூறாக சிதறியது. போலீசார் இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை கேஸ் கட்டர்கள் மூலமாக பேருந்து பாகங்களை வெட்டியெடுத்து மீட்டனர்.

மூடுபனியால் எதிரே வந்த வாகனங்கள் தெரியாமல் மறைந்ததால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments