அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு ; தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 4876
அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு

ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டதாக உள்ளதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை காரப்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். டெல்டா வகை கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக நீங்கவில்லை என்றும், முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை கட்டாயம் கடைக்கப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் நுரையீரல் பாதிப்புகள் குறைவாக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments