ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் ; உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

0 3848
ஸ்பா, மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமராக்களை வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும்

ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைப்பது, அவர்களின் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஸ்பா நடத்த அனுமதிக்கக் கோரியும் தடையில்லா சான்றிதழ் வழங்கக்கோரியும் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், சட்டவிரோத செயல்களுக்கு இடம் கொடுக்காமல் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

மேலும், மசாஜ் சென்டர்களுக்கு வரும் நபர்களை கண்காணிக்க வேண்டுமானால் வெளிப்புறத்தில் கேமராக்களை பொருத்தலாம் என்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வழக்கு குறித்த மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments