கார் உரசியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் சுருண்டு விழுந்து விபத்து

0 3201
கார் உரசியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் சுருண்டு விழும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கார் உரசியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் சுருண்டு விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திங்கட்கிழமை வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வள்ளியூர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் வலதுபுறம் ஏறியவாறு வந்த கார் ஒன்றின் பக்கவாட்டில் உரசி, நிலைதடுமாறி சுழன்று கீழே விழுந்தார்.

தலைக்கவசத்தின் கழுத்துப் பட்டையை அணியாததால், மாரியப்பன் விழுந்த வேகத்தில் அது தனியாகக் கழன்று விழுந்தது. அதேநேரம் மாரியப்பனை பின் தொடர்ந்து ஸ்கூட்டரில் பள்ளி மாணவியுடன் வந்த ஒருவரும் நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்கத்தில் மோதினார்.

இந்த விபத்தில் மாரியப்பனுக்குக் கால் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments