தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் ; தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ

0 3142
நாளைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிப்பு

தமிழகத்தில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6கோடியே 28லட்சத்து 94ஆயிரத்து 531 பேராக இருந்தது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நாளைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments