சென்னை பல்கலைக்கழகம் அதன் பெயரை இழந்து வருகிறது ; உயர்நீதிமன்றம் வேதனை

0 2650
சென்னை பல்கலைக்கழகம் அதன் பெயரை இழந்து வருகிறது

ஒரு காலத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கிய சென்னை பல்கலைக்கழகம், இன்று அப்பெயரை இழந்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கூடுதல் தொழில்நுட்ப அலுவலராக பணிபுரிந்தவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதை பெருமையாக சொன்ன காலம் போய், தற்போது அதே பெருமை நீடிக்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு சேவையை பேணி காக்காத அதிகாரிகளுக்கு எதிராக அதிகபட்ச தண்டனை விதிக்கவும், பொறுப்பற்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும் அறிவுறுத்தபட்டது. பல்கலைகழகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments