இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 80,000 மையங்கள் செயல்பட்டு வருகிறது ; அமைச்சர் அன்பில் மகேஷ்

0 5273
"இல்லம் தேடி கல்வி" திட்டத்தின் கீழ் 80,000 மையங்கள்

தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" திட்டத்தின் கீழ், இதுவரை 80 ஆயிரம் மையங்கள் தொடங்கி செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே பொத்தமேட்டுப்பட்டியில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா பரவலால் 8-ம் வகுப்பு வரை தற்போது பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், மாணவர்களிடையே கற்றல் இடைவெளி இருக்க கூடாது என்பதில், அரசு கவனமாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித் தொலைக்காட்சி மற்றும் பாடங்கள் பதிவு செய்யப்பட்ட 8 ஆயிரம் வீடியோக்கள் மூலம் மாணவர்கள் பயன்பெறுவதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments