2 வயது குழந்தையை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ; குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அமைச்சர் நிவாரண உதவி

0 2854
முதல்வரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று அமைச்சர் நிவாரண உதவி

கடலூரில் நாய்கள் கடித்துக்குதறிய 2 வயது குழந்தையின் பெற்றோரை முதல்வர் உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியையும் வழங்கினார்.

தமிழரசி - சபரிநாத் தம்பதியின் 2 வயது குழந்தை அயனேஷ், நெய்வேலியில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்துக் குதறியதில் கண், முகம், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இது குறித்து குழந்தையின் தாய் தமிழரசி, சமூக வலைத்தளங்களில் மேற்கொண்ட விழிப்புணர்வு பதிவுகள், முதல்வரின் கவனத்திற்கு சென்றதையடுத்து குழந்தைக்கு நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments