தோழி என்னும் பெண் காவலர்களின் இருசக்கர வாகன ரோந்து சேவை தொடக்கம்

0 3625
தோழி என்னும் பெண் காவலர்களின் இருசக்கர வாகன ரோந்து சேவை தொடக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதி, பெண் காவலர்களின் இருசக்கர வாகன ரோந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

"தோழி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோந்து சேவையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்கள், பக்தர்கள் பாதையாத்திரை வரும் பாதையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், குற்றச்செயல்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் குழந்தைகளைக் கடத்துபவர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட உள்ளனர். பாதயாத்திரை வரும் பெண்கள் 181 என்ற டோல்-ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொண்டு புகாரளித்தால் பெண் காவலர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments