தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

0 3489
தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் தாம்பரம், பள்ளிக்கரணை காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் கீழ் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலையங்கள், 16 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் கீழ் 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 8 மகளிர் காவல் நிலையங்கள், 8 போக்குவரத்து காவல் நிலையங்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments