ஜெயந்தி விழாவை ஒட்டி 1,00,008 வடை மாலையுடன் காட்சி அளித்தார் நாமக்கல் ஆஞ்சநேயர்!

0 4822

ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று அதிகாலை1 லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டதை ஒட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் ராஜேஷ்குமார் எம்.பி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் கோவிலில் அனுமதி வழங்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு மாலையாக சார்த்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments