சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 5831
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில் போரூரில் அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், அதே நாளில் பள்ளிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். அதற்காக ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இணைந்து பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசியை மாணவர்களுக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments