தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்

0 3369

தமிழ்நாட்டிலும், 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு இன்று தொடங்கியது.

ஜனவரி 3-ம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கவுள்ள நிலையில், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், தமிழகத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி அல்லது கல்லூரி அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை கோவின் செயலியில் பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என சுமார் ஒரு கோடி பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments