இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 5 சவரன் தங்க நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறை

0 3939

சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில், இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 5 சவரன் தங்க நகை உள்ளிட்டவற்றை தீயணைப்பு துறையினர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த பீரோவில், 5 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தனர். ஆவணங்களை சரிபார்த்த தீயணைப்பு துறையினர் நகைக்கு சொந்தக்காரரான சாந்தி என்பவரிம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments