தொடர்கனமழை - புழல் ஏரியில் இருந்து 1500 கன அடி நீர் திறப்பு : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு

0 2948

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை நெருங்கியதால் ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது. மேலும் ஏரியின் நீர்மட்டம் 22அடியை நெருங்கியதை அடுத்து பாதுகாப்பு கருதி 1000கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமானது கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு 3 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 1500கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 21அடியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments