சென்னையில் பெய்த திடீர் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் - முதலமைச்சர்

0 3340

சென்னையில் பெய்த திடீர் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வானிலை கணிப்புகளையும் மீறி கொட்டித் தீர்க்கிறது மழை என்றும் எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதோடு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் இருந்து திரும்பியவுடன் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நிலைமை விரைந்து சீர்செய்யப்படும் என்றும் பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு மழைக்கால வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments