அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல்..!
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
பணமோசடி செய்ததாகவும், பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கின் 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை இயக்குநரகம் PMLA நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தேஷ்முக்கின் இரண்டு மகன்கள், ஆடிட்டர் ஆகியோர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
Comments