சென்னையில் குடிநீர் விநியோகிக்கும் டேங்கர் லாரியை கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள்.!

0 2690

சென்னை கொடுங்கையூரில், குடிநீர் விநியோகிக்கும் டேங்கர் லாரியை கள்ளச்சாவி போட்டு கடத்திச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தமிழ் நகரைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தனக்குச் சொந்தமான டேங்கர் லாரியினை கடந்த 26-ஆம் தேதி காலையில் காவேரி சாலையில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

மாலையில் வந்து பார்த்த போது லாரி மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு லாரியை திருடிச் சென்றது தெரிய வந்தது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments