சென்னையில் அடிக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் பொறுத்தும் பணியின் போது எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் காயம்.!

0 2749

சென்னை கீழ்ப்பாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் பொறுத்தும் பணியின் போது எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களுள் படுகாயம் அடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அடிக்குமாடி குடியிருப்பில் உள்ள அனுராதா என்பவரது வீட்டில் இன்று மதியம், ஏசி இயந்திரம் பொறுத்தும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏசியில் நிரப்பப்பட்ட எரிவாயு கசிந்து தீப்பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments