தகுதியுடைய 13 லட்சம் பேருக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் ஐ.பெரியசாமி

0 4541

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீதுகளும், நகைகளும் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 சவரனுக்கு உட்பட்ட, தகுதியுடைய பதிமூன்றரை லட்சம் பேருக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ரசீது அச்சடிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வரும் வாரத்தில் பயனாளிகளுக்கு கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

ஒரே நபரே பல முறை கடன் பெற்றது உள்பட முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களுக்கும், தள்ளுபடி சலுகை பொருந்தாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments