இருசக்கர வாகனத்தின் பின்பக்கமாக மோதிய டேங்க்கர் லாரி : உடல் நசுங்கி ஒருவர் பலி. குடும்பத்தினருடன் சென்றவருக்கு நேர்ந்த துயரம்

0 3456

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் பின்பக்கமாக டேங்க்கர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

முத்தையாபுரத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் ஆறுமுகமங்கலம் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

முக்காணி அருகே தண்ணீர் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அன்புச் செல்வன், லாரியின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தார்.

லாரி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அவரது மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவனை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments