தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

0 4010

மிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

புதிதாக தொற்று உறுதியானவர்களில் 4 பேர் ஆபத்தான நாடுகளிலிருந்தும், 3 பேர் ஆபத்தில்லா நாடுகளிலிருந்தும் வந்தவர்கள் என குறிப்பிட்ட சுகாதாரத்துறையினர், எஞ்சியவர்கள் ஒமைக்ரான் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரில் எட்டு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் திருவாரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலையை சேர்ந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments