ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், எஸ் ஜீன் மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு.!

0 3245

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், எஸ் ஜீன் மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

இங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த நோயாளி ஒருவர் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவத்துறையினர் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஏற்கனவே 42 பேருக்கு எஸ் ஜீன் மரபணு மாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைவரும் கொரோனா சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களது முழு பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து இன்று பெறப்படும் என்றும், அதில் ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்பது தெரியவரும் என்றும், மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments