குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்து விபத்து, வீடுகளை இழந்தோருக்கு வழங்கப்பட்டது ரூ.ஒரு லட்சம்

0 2660

சென்னை திருவொற்றியூரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு வசித்தவர்கள் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் 28 வீடுகள் சரிந்து விழுந்தன.
அங்கு வசித்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் நிதியுதவியும், மாற்று வீடும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி பாதிக்கப்பட்டோருக்கு 28 லட்சம் ரூபாயை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார். அரிசி, தலையணை, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments