தடுப்பூசி போடாமல் 'டிமிக்கி'.... வேணும்னா மரத்தில் ஏறி வந்து ஊசி போடுங்க....கிராமவாசி அட்ராசிட்டி

0 3585

புதுச்சேரி அருகே கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமவாசி ஒருவர் மரத்தில் ஏறிக் கொண்ட வீடியோ வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கோனேரிகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தாத ஒருவரை அழைத்தபோது வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு, தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாக அவசரம் காட்டினார்.

தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி அவரை அழைத்த போது, கையில் வைத்திருந்த அரிவாளால் மரத்தை வெட்டுவது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார். செவிலியர்அவரை வற்புறுத்தி அழைத்த போது, வேண்டுமானால் மரத்தில் ஏறி வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி செவிலியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments