ஒடிசாவில் மேற்கூரையில் பதுங்கிய 12 அடி நீள ராஜநாகம்.. எலும்புகள் உடைந்திருந்ததால் சிகிச்சை

0 3952

ஒடிசாவில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ராஜநாகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிலிகா என்ற இடத்தில் வீடு ஒன்றின் கூரைப் பகுதியில் ராஜநாகம் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அதனை பத்திரமாக மீட்டனர். 12 அடி நீளமுள்ள அந்த ராஜநாகத்தின் விலா பகுதியில் 4 எலும்புகள் உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் பாம்பு புவனேஸ்வரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்கள் கண்காணிப்பிற்கு பின் அதனை வனப்பகுதியில் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments