தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் ; தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

0 5445
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறையினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் ஒமைக்ரன் பாதிப்பு தொடர்பாகவும், தொற்றுப் பரவல் நிலவரம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள நிலையில், தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments