பள்ளிகளில் முழுநேர வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம்

0 8104
பள்ளிகளில் முழுநேர வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம்

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை முடிந்தபின் முழுநேர வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, திருப்புதல் தேர்வு, முழுநேர வகுப்புகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதுதவிர பள்ளிகளில் பழுதான கட்டடங்களை இடித்தல் தொடர்பான அறிக்கை குறித்தும், பள்ளிகளில் பாலியல் புகார்கள் தொடர்பாக புகார் பெட்டி வைத்தல், பள்ளி வளாகங்களில் உதவி தொலைபேசி எண்கள் வைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments