காவலர் ஓட்டி வந்த கார் முதியவர் மீது மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 3074
காவலர் ஓட்டி வந்த கார் முதியவர் மீது மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

சென்னை விருகம்பாக்கத்தில் காவலர் ஒருவர் ஓட்டி வந்த கார், வீட்டுக்கு முன் அமர்ந்திருந்த முதியவர் மீது மோதியதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரஞ்சித் குமார் என்ற அந்த காவலர் தனது நண்பரின் இன்னோவா காரை எடுத்துக் கொண்டு, மற்றொரு நண்பரான மணிகண்டன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.

விருகம்பாக்கத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சிறுவர்கள் சிலர் பிரசாதம் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வெளியே ஓடி வந்துள்ளனர்.

அவர்கள் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக ரஞ்சித்குமார் வேகமாக காரை திருப்பிய நிலையில், அது கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சங்கர் என்ற முதியவர் மீது மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வந்து விசாரித்ததில் ரஞ்சித்குமார் குடிபோதையில் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments