தண்டவாளத்தை யானைகள் கூட்டம் கடக்க முயன்ற போதுவிபரீதம்.. சரக்கு ரயில் மோதி யானை உயிரிழப்பு..!

0 2875
தண்டவாளத்தை யானைகள் கூட்டம் கடக்க முயன்ற போது சரக்கு ரயில் மோதி யானை உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் மோதி யானை உயிரிழந்தது. இரு யானைகள் படுகாயம் அடைந்தன. கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி வனச்சரகத்திற்குட்பட்ட பூசண்டபூர் ரயில் நிலையம் அருகே தண்டாளத்தை யானைகள் கூட்டம் கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சென்ற வனச்சரகர் ரவீந்திரநாத் பாண்டா மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானையின் சடலத்தை கைப்பற்றினர். விபத்தில் படுகாயமடைந்த 2 யானைகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments