சீற்றத்தை நிறுத்தியது கும்பிரே வியகா எரிமலை

0 2440
சீற்றத்தை நிறுத்தியது கும்பிரே வியகா எரிமலை

ஸ்ப்யினின் லா பல்மா தீவில் 3 மாதங்களாகக் குமுறிய எரிமலை அதன் சீற்றத்தை நிறுத்தி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி குமுறத் தொடங்கிய கும்பிரே வியகா எரிமலை, இம்மாத 13ஆம் தேதி சீற்றத்தை நிறுத்தியது. எரிமலை மீண்டும் குமுறத் தொடங்கலாம் என கிறிஸ்துமஸ் வரை காத்திருந்த அதிகாரிகள், எரிமலை தணிந்து விட்டதாகத் தற்போது அறிவித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பால் 3000 கட்டிடங்களும், பாதிக்கும் மேற்பட்ட வாழைத் தோட்டங்களும் சேதமடைந்ததால் அத்தீவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments